Friday, April 3

கொரோனாவை குறித்து மருத்துவம் சொல்வதும், வேதம் சொல்வதும்


                          மருத்துவம் சொல்வதையும் செய்யுங்கள்;
                          வேதம் சொல்வதையும் விடாதிருங்கள்.



(1) மருத்துவம் சொல்வது: முகம் மற்றும் கைகால்கள் சோப்பினால் கழுவப்படவேண்டும்

வேதம் சொல்வது: பாவங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படவேண்டும் (1யோவான் 1:7)

(2) மருத்துவம் சொல்வது: வீட்டுக்குள் அடங்கியிருங்கள்

வேதம் சொல்வது: தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேதுரு 5:6)

(3 மருத்துவம் சொல்வது: வியாதியஸ்தரிடம் தள்ளியிருங்கள்

வேதம் சொல்வது: உலகத்திடம் இருந்து தள்ளியிருங்கள் (யாக்கோபு 4:4)

(4) மருத்துவம் சொல்வது: மருத்துவரின் அறிவுரைகளை கைக்கொள்ளுகிற மனுஷன் கொரோனாவால் பாதிக்கப்படாமல் பிழைப்பான்

வேதம் சொல்வது: தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற மனுஷன் சாகாமல் பிழைப்பான் (லூக்கா 4:4)

(5) மருத்துவம் சொல்வது: முகக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்

வேதம் சொல்வது: விசுவாசம், அன்பு எனும் மார்க்கவசத்தை அணிந்துகொள்ளுங்கள் (1தெசலோனிக்கேயர் 5:8)

(6) மருத்துவம் சொல்வது: இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்

வேதம் சொல்வது: பிரச்சனை, துன்பம், போராட்டம் இருந்தால் ஆண்டவரிடம்  செல்லுங்கள் (மத்தேயு 11:28)

(7) மருத்துவம் சொல்வது: உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்

வேதம் சொல்வது: உடலை பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் (1 தெசலோனிக்கேயர் 4:5)

(8) மருத்துவம் சொல்வது: நோய் தொற்றியிருந்தால் பயப்படாதீர்கள்

வேதம் சொல்வது: கர்த்தர் கூட இருக்கிறார்... பயப்படாதீர்கள் (ஏசாயா 43:5)

(9) மருத்துவம் சொல்வது: பிறரிடம் கைக்கொடுப்பதை தவிருங்கள்

வேதம் சொல்வது: தேவன் பொல்லாதவர்க்கு  கைக்கொடுப்பதில்லை (யோபு 8:20)

(10) மருத்துவம் சொல்வது: மற்றவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும்

வேதம் சொல்வது: அந்தகாரத்தின் கிரியைகளை தள்ளிவிடவேண்டும் (ரோமர் 13:12)

(11) மருத்துவம் சொல்வது: அவசியமற்ற பிரயாணத்தை தவிர்ப்பது நல்லது

வேதம் சொல்வது: அவசியமற்ற பேச்சுக்களைக் (ஆகாத சம்பாஷனைகள்) தவிர்ப்பது நல்லது (1 கொரிந்தியர் 15:33)

(12) மருத்துவம் சொல்வது: நோய் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து விலகியிருங்கள்

வேதம் சொல்வது: மாறுபாடான சந்ததியைவிட்டு விலகியிருங்கள் (அப்போஸ்தலர் 2:40)

(13) மருத்துவம் சொல்வது: அசுத்தமான கைகளால் கண் மூக்கு வாய் காது போன்றவற்றை தொடாதிருங்கள்

வேதம் சொல்வது: நீங்கள் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் (2 கொரிந்தியர் 6:17)

(14) மருத்துவம் சொல்வது: நோயாளி மருந்துகளால் குணமாவான்

வேதம் சொல்வது: விசுவாசி இயேசுவின் தழும்புகளால் குணமாவான் (1 பேதுரு 2:24)

(15) மருத்துவம் சொல்வது: மருத்துவரின் அறிவுரைகளை கைக்கொள்ளுங்கள்

வேதம் சொல்வது: என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் (யோவான் 14:15)

(16) மருத்துவம் சொல்வது: சிகிச்சையினாலே நோயாளி பிழைப்பான்

வேதம் சொல்வது: விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (எபிரேயர் 10:38)

நிதம் அமர் அவர் பாதம். வராது உனக்கு சேதம்.