மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். – (மத்தேயு 12:36)
தேவ பிள்ளைகளே, நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்.
*பரிசுத்த வேதம் போதிக்கும் "பேசக்கூடாத பேச்சுகள்"*
1) பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது. – (யாக்கோபு 3:5)
2) மேட்டிமையான மற்றும் அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது. – (1சாமுவேல் 2:3)
3) வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது. – (சங்கீதம் 75:4)
4) அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது. – (மத்தேயு 5:37)
5) கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது. – (1 தீமோத்தேயு 4:7)
6) வீணான பேச்சுகளை பேசக்கூடாது. – (மத்தேயு 12:36)
7) கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது. – (நீதிமொழிகள் 15:1)
8) நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது. – (நீதிமொழிகள் 27:2)
9) நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது – (நீதிமொழிகள் 20:6)
10) தீமையை பேசக்கூடாது. – (யோபு 27:3)
11) துர்ச் செய்தியை பேசக்கூடாது. – (எண்ணாகமம் 13:33)
12) வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது. – (எபேசியர் 5:4)
13) புத்தியீனமானவைகளை பேசக்கூடாது – (எபேசியர் 5:4)
14) யாரையும் பரியாசம் பண்ணிப் பேசக்கூடாது – (எபேசியர் 5:4)
15) யாரையும் சபித்தல் கூடாது – (யாக்கோபு 3:10)
16) மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது – (நீதிமொழிகள் 12:18)
17) இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது – (யூதா 16)
18) கோள் செல்லுதல் கூடாது. – (லேவியாகமம் 19:16)
19) நாவினால் புறங்கூறுதல் கூடாது – (சங்கீதம் 15:3)
20) பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது – (யோபு 15:3)
21) தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசக்கூடாது – (யோபு 15:3)
22) கபடான வார்த்தைகளை பேசக்கூடாது – (சங்கீதம் 120:2,3)
23) கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது – (சங்கீதம் 94:4)
24) கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது – (சங்கீதம் 64:4)
25) தகாத காரியங்களை பேசக்கூடாது – (1 தீமோத்தேயு 5:13)
26) மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது – (ரோமர் 2:1)
27) இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது – (1 தெசலேனிக்கேயர் 2:5)
28) பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது – (நீதிமொழிகள் 29:20)
29) தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது – (2 பேதுரு 2:3)
30) விரோதமான பேச்சுகளை பேசக்கூடாது – (3 யோவான் 10)
31) மாயையைக் குறித்து பேசக்கூடாது – (சங்கீதம்144:8 )
32) ஆகாத சம்பாஷணைகள் கூடாது – (1 கொரிந்தியர் 15:3)
33) பொய்யான வார்த்தைகளை பேசக்கூடாது – (சங்கீதம் 54:4)
34) இச்சகம் பேச வேண்டாம் (சங்கீதம் 12: 3)
35) கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம் (எபேசியர் 4: 29))
36) கள்ள நாவில் பேச வேண்டாம் – (சங்கீதம் 109: 2)
37) மாயையாய் பேச வேண்டாம் (சங்கீதம் 144:8)
38) ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள் (யாக்கோபு 4:11)
*அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?*
1) கர்த்தர் செய்த அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். (1 நாளாகமம் 16:9)
2) பிறனோடே உண்மையைப் பேசுங்கள். (சகரியா 8:16)
3) பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். (எபேசியர் 4:29)
4) ஞானத்தைப்பேசுங்கள் (சங்கீதம் 49: 3)
5) யதார்த்தமாய் பேசுங்கள் (சங்கீதம் 52: 3)
6) நீதியை பேசுங்கள் (சங்கீதம் 58: 1)
7) கர்த்தருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுங்கள் (சங்கீதம் 119: 46)
8) மேம்படான காரியங்களை பேசுங்கள் (நீதிமொழிகள் 8: 6)
9) சுவிஷேசத்தை குறித்து பயப்படாமல் பேசுங்கள் (அப்போஸ்தலர் 18: 9)